ஆப்நகரம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், கூடுதலாக 2,850 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, அறிவித்துள்ளது.

TNN 29 Jul 2016, 6:12 pm
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், கூடுதலாக 2,850 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, அறிவித்துள்ளது.
Samayam Tamil microsoft to cut additional 2850 jobs from smartphone sector
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை!


இந்நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவை விலைக்கு வாங்கியது. தொடக்கத்தில் ஆட்குறைப்பு ஏதும் செய்யப்படாது என்று, மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் உறுதி அளித்தபோதிலும், படிப்படியாக, ஆட்குறைப்பு மற்றும் வர்த்தக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, 2015ம் ஆண்டில் நோக்கியா ஸ்மார்ட்ஃபோன் பிரிவில் பணிபுரியும் 7,400 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, அறிவித்தது. எனினும், கணிசமான ஊழியர்களே வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், 2016ம் ஆண்டிலும், 1,850 பேரை பணிநீக்கம் செய்வதாகக் கூறி, அதன்படி, அனைவரையும் வெளியேற்றியது.

தற்சமயம், 2017ம் ஆண்டுக்கான வர்த்தகச் செயல்திட்டம் வெளியிட்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஸ்மார்ட்ஃபோன் பிரிவில் இருந்து கூடுதலாக, 2,850 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலமாக, 2016-17ம் நிதியாண்டில் மொத்தம் 4,700 பேரை பணிநீக்கம் செய்வதாகவும் மைக்ரோசாஃப்ட் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலமாக, ஏற்கனவே நோக்கியா நிர்வாகத்தின்கீழ் பணிபுரிந்த ஊழியர்களில் பெரும்பகுதியினரை வெளியேற்ற மைக்ரோசாஃப்ட் முனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்