ஆப்நகரம்

ஐடி தொழிலாளர்களுக்கு நற்செய்தி... மைக்ரோசாஃப்டில் வேலை!

கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் புதிதாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 15 Jun 2020, 7:52 pm
அமெரிக்காவின் மிகப் பெரிய ஐடி தொழில்நுட்ப சேவை நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கார்பரேஷன் இந்தியாவிலும் தொழில் புரிந்து வருகிறது. இந்நிறுவனம் மற்ற ஐடி நிறுவனங்களைப் போலவே கொரோனா ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இந்திய ஐடி துறையில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் கூட வேறு வழியில்லாமல் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன. சில நிறுவனங்கள் சம்பளக் குறைப்பும் செய்துள்ளன. புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் வழங்கப்படாது எனவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன.
Samayam Tamil microsoft


இந்நிலையில் ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தியாக, புதிதாக ஊழியர்களைப் பணியமர்த்தப் போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் குறிப்பிடத்தகுந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிளவுட் துறையில் வளர்ச்சி காணும் திட்டத்தில் இறங்கியுள்ள மைக்ரோசாஃப்ட், அதில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளது.

5 கோடிப் பேருக்கு வேலை: மத்திய அரசு இலக்கு!

இந்தியாவில் ஏற்கெனவே மூன்று டேட்டா மையங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு இருக்கும் நிலையில், அதன் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த பணியமர்த்துதல் தொடர்பான விவரங்களை மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் ஆனந்த் மகேஷ்வரி உறுதிசெய்துள்ளார். டிஜிட்டல் வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில், ஆன்லைன் மோசடிகளின் அச்சுறுத்தலும் அதிகரிக்கிறது என்று ஆனந்த் மகேஷ்வரி கூறியுள்ளார்.

சென்செக்ஸ் வீழ்ச்சி... வங்கிகளுக்கு வந்த சோதனையை பாருங்க!

இந்திய ஐடி தறையில் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மட்டும் அதிலிருந்து மாறுபட்டு ஊழியர்களைப் புதிதாகப் பணியில் அமர்த்துவதாகக் கூறியுள்ளது ஐடி துறையினரிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்