ஆப்நகரம்

பால் விலையும் உயரப் போகுது! அமுல் அறிவிப்பு!

விரைவில் பால் விலை உயர்த்தப்படும் என்று அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2022, 2:38 pm
இந்தியாவில் இப்போது பெட்ரோல், சமையல் எரிவாயு, காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் இதுபோன்ற செலவுகளுக்கு போதுமான அளவில் இல்லை என்று பொதுமக்கள் கதறுகின்றனர். அந்த அளவுக்கு விலைவாசி உயர்வு வாட்டி மக்களைவதைக்கிறது. டீ, காபி, உணவு விலையும் உயர்ந்துள்ளது.
Samayam Tamil milk


இந்நிலையில், பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி அத்தியாவசிய உணவுப் பொருளாக உள்ள பால் விலை உயர்வு பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கிறது. அதிவிரைவில் பால் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய அமுல் நிறுவன நிர்வாக இயக்குநரான சோதி, விலை உயர்வு கணிசமாக இருக்கும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தற்போது கூறியுள்ளார்.

ஆற்றல் செலவுகள், லாஜிஸ்டிக் செலவுகள், பேக்கேஜிங் செலவுகள் போன்றவை அதிகரித்துள்ளதால் பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில்தான் அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருந்தது. மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பால் விலை 8 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் சாப்பாடு விலை உயர்வு.. பொதுமக்களுக்கு அடுத்த ஷாக்!
பால் விலை உயர்வு பொதுமக்களை நேரடியாகப் பாதித்தாலும், இதன் மூலம் பால் விவசாயிகள் ஒருபுறம் பயன்பெறுகின்றனர். எனவே அவர்களது வாழ்வாதாரம், தொழில் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பால் விலையை கூட்டுறவு நிறுவனங்கள் உயர்த்துகின்றன. தற்போதைய அறிவிப்பின்படி, பால் விலை எவ்வளவு உயரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் கடந்த முறை உயர்த்தப்பட்டதை விட அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்