ஆப்நகரம்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் உயர்வு!

தபால் சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

Samayam Tamil 29 Nov 2020, 12:52 pm

தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச தொகை (மினிமம் பேலன்ஸ்) உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு பௌயன்படுத்துவோர் 500 ரூபாய் மினிமம் பேலன்ஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil Post Office Saving


டிசம்பர் 12ஆம் தேதி முதல் இப்புதிய மினிமம் பேலன்ஸ் முறை அமலுக்கு வருகிறது. இதுகுறித்து இந்திய தபால் அலுவலகம் ட்விட்டரில், “இனி தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில், “டிசம்பர் 12ஆம் தேதிக்குள் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

ஒரு ரூபாயில் தங்கம் வாங்குவது எப்படி?

ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும், சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் 100 ரூபாய் வசூலிக்கப்படும். கணக்கில் பணமே இல்லாவிட்டால் தானாகவே மூடப்பட்டுவிடும் எனவும் தபால் துறை தெரிவித்துள்ளது.

தற்போது தபால் சேமிப்புக் கணக்குகளுக்கு 4 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் 10ஆம் தேதி முதல் மாத இறுதி வரை இருக்கும் மினிமம் பேலன்ஸ் தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டு செலுத்தப்படும்.

10ஆம் தேதி முதல் மாத இறுதி வரை மினிமம் பேலன்ஸ் 500 ரூபாய்க்கு கீழே இருந்தால் வட்டியே வழங்கப்படாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்