ஆப்நகரம்

தெருவோர வியாபாரிகளுக்குக் கடன்: புதிய செயலி அறிமுகம்!

தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று கடன் வசதியை வழங்கும் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jul 2020, 9:03 pm
பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா எனப்படும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டம் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது.
Samayam Tamil street vendors


இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். இந்தக் கடன் ஓராண்டு காலத்தில் மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். உரிய காலத்தில் இந்தக் கடன் தொகையைச் செலுத்தினாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினாலோ ஆண்டொன்றுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும். இந்த மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை நேரடியாக டெபாசிட் செய்யப்படும். பணத்தை முன்னதாகவே திருப்பிச் செலுத்தி விட்டால் அதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது.

கொரோனாவிடம் சிக்கிய விமானங்கள்... அஞ்சி ஓடும் பயணிகள்!

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகள் நுண்கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். 48,000க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முந்தைய காலம் வரை நகர்ப்புறப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் தெருக்களில் வியாபாரம் செய்துவந்த 50 லட்சத்துக்கும் அதிகமான தெரு வியாபாரிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

வரி செலுத்துவோர் 21 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்!

இந்நிலையில், இத்திட்டத்துக்கான பிரத்தியேகமான மொபைல் செயலியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிஷ்ரா இன்று தேசியத் தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் கடன் விண்ணப்பங்களைப் பெறுவது, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல்வேறு பணிகளை உள்ளடக்கிய களப் பணியாளர்களுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு டிஜிட்டல் பாலமாக இந்த செயலி அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தாங்க வச்சுக்கோங்க.... டீல் பேசும் மல்லையா!

இந்தச் செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியானது காணொளி மூலமாக நடைபெற்றது. தெருவோர வியாபாரிகள் நுண்கடன் பெறுவதற்கு காகிதங்கள் இல்லாமல், டிஜிட்டல் தளம் மூலமாகவே கடன் பெறமுடியும் என்பதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மேலும் ஒரு உந்துசக்தியாக இந்தச் செயலி அமையும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வநிதித் திட்டம் பற்றிய விவரங்கள் கொண்ட இணையதளத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்தச் செயலிலும் உள்ளன. எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்ற வசதியும் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்