ஆப்நகரம்

மொபைல் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும்: ஏர்டெல் அறிவிப்பு!

மொபைல் கட்டணங்கள் தொடர்ந்து உயரத்தான் செய்யும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Oct 2020, 8:18 pm
இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனம், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே சரிவுப் பாதையில் பயணிக்கிறது. காரணம், ரிலையன்ஸ் ஜியோவின் வருகைதான். இந்திய நெட்வொர்க் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகு கடுமையான போட்டி நிலவியது. சந்தாதார்களைத் தக்கவைத்துக்கொள்வதே மற்ற நிறுவனங்களுக்கு பெரும் சிரமமாக மாறியது. தற்போது ஜியோ சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது.
Samayam Tamil ஏர்டெல்


ஏர்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தைத் தொடர்ந்து சந்தையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இழப்புகள் அதிகரித்து வந்த வேளையில், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்தது. இதனால் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாயும் நிகர லாபமும் உயர்ந்தது. ஏர்டெல் நிறுவனத்தின் இழப்பு ரூ..763 கோடியாகக் குறைந்தது. அதேபோல, வாடிக்கையாளர்கள் வாயிலாகக் கிடைக்கும் சராசரி வருவாய் நபர் ஒருவருக்கு ரூ.162 ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் இந்த வருவாய் ரூ.128 ஆக மட்டுமே இருந்தது.

மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்!

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான கோபால் விட்டல் பேசுகையில், “பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான அளவு டேட்டாவை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அன்லிமிடெட் காலிங் போன்ற பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தலாம். எனவே விரைவில் எங்களது பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.200 வரையிலும் ரூ.300 வரையில் உயரும் என்று நம்புகிறோம். நாங்கள் இப்போது ஏதுவான கட்டணத்தையே நிர்ணயிக்கிறோம். மற்றவர்கள் ஏற்கெனவே அளவுக்கு அதிகமாகக் கட்டணம் நிர்ணயிக்கின்றனர். விரைவில் நாங்களும் கட்டணத்தை உயர்த்துவோம். கட்டண உயர்வு என்பது தேவையான ஒன்றுதான்” என்றார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறையும், மொபைல் டேட்டா பயன்பாடும் அதிகரித்ததால் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்