ஆப்நகரம்

மொபைல் கட்டணம் கம்மி.. பிரதமர் மோடி பேச்சு!

தொலைத் தொடர்புத் துறையில் உள்ள போட்டியால் மொபைல் கட்டணங்கள் குறைவாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 May 2022, 3:18 pm
இந்திய தொலைச் சந்தையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைய நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தது. மொபைல் டேட்டா உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகமாகவே இருந்தது. ஒரு மாதத்துக்கு 1 ஜிபி டேட்டா என்பதே பலருக்கு பெரும் விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது ஒரு மணி நேரத்திலேயே ஒரு ஜிபி டேட்டா தீர்ந்துவிடுகிறது. அந்த அளவுக்கு மொபைல் டேட்டா பயன்பாடு அதிகமாக உள்ளது.
Samayam Tamil mobile


இந்த அளவுக்கு மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைவாக இருப்பதற்கு சந்தையில் நிலவும் போட்டித் தன்மையே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சில்வர் ஜூப்ளி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு பேசினார். மேலும், 5ஜி சேவையை அதிவிரைவாக செயல்படுத்தும் தேவை இருப்பதாகவும், அடுத்து 6ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நுழைந்தபோது மொபைல் டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவித்தார். இதனால் நிறையப் பேர் ஜியோ சிம் கார்டை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். அதேபோல, மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோவுக்கு மாறினர். ஜியோ வழங்கிய கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன.

அமெரிக்காவில் பணத்தைக் கொட்டும் இந்தியர்கள்!
அதேபோல, ஜியோவை சமாளிக்க வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்தன. ஜியோ வந்தபிறகு இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் போட்டி அதிகரித்தது. மற்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்