ஆப்நகரம்

மோடி அரசு சார்பில்.. உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் போடப்படும்.. என்னென்ன சொல்றாங்க பாருங்க!!

சமீபத்தில் இச்செய்தி வைரலாகியதை அடுத்து இச்செய்தி போலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2022, 4:07 pm
சமீபத்தில் இந்தியப் பெண்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள நிதி உதவி குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதம மந்திரி நாரி சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் பெண் குடிமக்களுக்கு மத்திய அரசு ரூ.2.20 லட்சம் கடனாக வழங்குகிறது என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil Fake news


இதற்கிடையில், இந்த மோசடி செய்தி எனவும், இந்த செய்தி போலியானது என்றும் PIB (Press Information Bureau) கூறியுள்ளது. மேலும், மத்திய அரசு எந்த ஒரு உதவியையும் அறிவிக்கவில்லை என்றும் பிஐபி தெரிவித்துள்ளது.

மேலும் பிரதான் மந்திரி நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மத்திய அரசு ரூ.2 லட்சத்து 20,000 வழங்கப் போவதாக ‘இந்தியன் ஜாப்’ யூடியூப் சேனல் கூறிவருகிறது. இந்தக் கூற்று போலியானது என்றும் மத்திய அரசால் இதுபோன்ற திட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை எனவும் PIB தரப்பில் தெரிவித்துள்ளது.

வைரஸ் செய்தியாக அனுப்பப்படும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB அவ்வப்போது மக்களை அறிவுறுத்திதான் வருகிறது.

PIB மூலம் செய்திகளை உண்மைச் சரிபார்ப்பது எப்படி

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம் மற்றும் அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு https://factcheck.pib.gov.in/
என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும்.

மாற்றாக நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலும் https://pib.gov.in/ இல் கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்