ஆப்நகரம்

ரூபாய் நோட்டுக்கள் போல் செல்லாது போகும் அடுத்த ஒன்னு; வரப்போகுது மத்திய அரசின் புது அறிவிப்பு!

ரூபாய் நோட்டு விவகாரத்தைப் போல், மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 22 Nov 2017, 11:49 pm
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தைப் போல், மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil modi govt may ban cheque books like demonetisation
ரூபாய் நோட்டுக்கள் போல் செல்லாது போகும் அடுத்த ஒன்னு; வரப்போகுது மத்திய அரசின் புது அறிவிப்பு!


கடந்த ஆண்டு நவம்பரில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்த 86% ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போயின. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திக்கு முக்காடினர்.

ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் நீண்ட வரிசையிலும் காத்திருந்தனர். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், உயிரையே விடும் நிலைக்கு சிலர் தள்ளப்பட்டனர். இதன் பாதிப்புகள் ஓராண்டாகியும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதையடுத்து பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் தான் டிஜிட்டல் இந்தியாவை கண்ட பாடில்லை.

இந்நிலையில் அடுத்த கட்டமாக செக் புக்குகளுக்கு தடை விதிக்கப் போவதாக இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் மூத்த தலைவர் பிரவின் கந்தவேல் அண்மையில் தெரிவித்தார். இந்தியாவில் 95% பேர் ரொக்கப் பண பரிவர்த்தனையை நம்பியே உள்ளனர்.

இந்த சூழலில் செக் புக்குகள் தடை செய்யப்பட்டால், 95% வர்த்தகம் பாதிக்கப்படும். இருப்பினும் மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Modi Govt may ban cheque books like demonetisation.

அடுத்த செய்தி

டிரெண்டிங்