ஆப்நகரம்

சுவிஸ் வங்கியில் குவியும் இந்தியர்களின் பணம்!

இந்தியர்கள் ரூ.30,000 கோடிக்கு மேல் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர்.

Samayam Tamil 17 Jun 2022, 2:28 pm
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களும் நிறுவனங்களும் தங்களது சொத்துகளுக்கு சொந்த நாட்டில் வரி செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்து அங்கு கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கின்றனர். இவர்களைப் பற்றிய விவரங்கள் அந்நாட்டு அரசால் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படுவதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அங்குள்ள வங்கிகளில் கோடி கோடியாய் கருப்புப் பணம் பதுக்கப்படுகிறது.
Samayam Tamil swiss


சுவிஸ் நாட்டு வங்கிகளில் குவிந்து கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையேயான தகவல் மாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (AEOI) அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புதல் தெரிவித்து அதன்படி விவரங்களை வழங்கி வருகிறது.

அதன்படி, 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.30,500 கோடி. இது கடந்த 14 ஆண்டுகளில் மிக அதிகமான தொகையாகும். 2020ஆம் ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் ரூ.20,700 கோடியாக மட்டுமே இருந்தது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சுவிஸ் டெபாசிட் பணம் அதிகரித்துள்ளது. பத்திரங்கள், பங்குகள் அடிப்படையில்தான் அதிகமான பணம் போடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

முன்னதாக 2006ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸாக இருந்தது. அதன் பின்னர் சுவிஸ் டெபாசிட் பணம் தொடர்ந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. மீண்டும் 2011ஆம் ஆண்டில் அது அதிகரித்தது. 2013, 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் அதிகமானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்