ஆப்நகரம்

ஜிஎஸ்டி பணத்தை கொடுக்கவே மாட்றாங்க: ப.சிதம்பரம் தாக்கு!

மாநிலங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு தராமல் இழுத்தடிப்பதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 16 Jun 2021, 12:29 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும். ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
Samayam Tamil pc


கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும் ஜிஎஸ்டி இழப்பீடு சரியாக வழங்கப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வந்துசேரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

35,000 ரூபாய்க்கு பைக் வாங்கலாம்... இது சூப்பர் சான்ஸ்!
2021 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.4,635 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் தரப்பிலிருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டைப் பொறுத்தவரையில் மே மாதம் வரையில் இன்னும் ரூ.2,507 கோடி நிலுவை உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.7,142 கோடி பாக்கி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரையில் ரூ.3,069 கோடி நிலுவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்