ஆப்நகரம்

ஆன்லைன் வேளாண் சந்தை: தமிழகத்தில் 2 லட்சம் பேர்!

மத்திய அரசின் ஆன்லைன் வேளாண் சந்தைத் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 2.15 லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2020, 7:07 pm
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்குச் சந்தையில் போதிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர். அதிகம் செலவு செய்து விவசாயம் செய்தால் அதைச் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால் அடுத்தகட்ட சாகுபடிக்குத் தேவையான பணம் இல்லாமல் அவர்கள் தவிக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, 2016ஆம் ஆண்டில் மத்திய அரசால் தேசிய மின்னணு வேளாண் சந்தைத் திட்டம் (இ-நாம்) கொண்டுவரப்பட்டது. இதில், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் மூலமாகவே தேவையான விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அதிகமாக இணைந்து பயன்பெற்று வருகின்றனர்.
Samayam Tamil eNam


இத்திட்டம் தொடங்கப்பட்டு இதுநாள் வரையில் நாடு முழுவதும் 1.67 கோடி விவசாயிகள் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் 1.45 லட்சம் வர்த்தகர்களும் இ-நாம் தளத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2.15 லட்சம் விவசாயிகளும், 2912 வர்த்தகர்களும், 98 விவசாய உற்பத்தி அமைப்புகளும், 33 கமிஷன் முகவர்களும் இணைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மட்டும் 2.19 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

உங்களுடைய ஆதார் எண் சரியானதா, போலியா?

இ-நாம் போர்ட்டலில் பதிவு செய்வதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. விவசாயியின் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை இந்த போர்ட்டலில் பதிவிட வேண்டும். வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவது, சந்தைகளை அணுகுவது, அருகிலுள்ள சந்தைகளிலிருந்து வந்து பொருட்களை வாங்கிச் செல்ல வழி வகை செய்வது, விரைவாகப் பணம் செலுத்துவது போன்ற பல்வேறு வசதிகள் இந்த இ-நாம் போர்ட்டலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்