ஆப்நகரம்

கூலித் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை!

அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் இ-ஷ்ரம் அட்டைகள் இதுவரையில் 3 கோடிப் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2021, 4:45 pm
நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டலை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இடம்பெற்றிருக்கும் வகையில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil e-shram


அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அவர்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்கும் நோக்கத்தில் மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதில் தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இந்த போர்ட்டலில் 38 கோடிக்கும் மேலான அமைப்பு சாரா தொழிலாளர்களைப் பதிவுசெய்ய மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இந்த போர்ட்டலுடன் 14434 என்ற டோல் ஃபிரீ நம்பரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Gold rate:ஷாக் அடிக்கும் தங்கம் விலை!

இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் அதிகமான அளவில் பதிவுசெய்து இ-ஷ்ரம் அட்டைகளை வாங்கி வருகின்றனர். இதுவரையில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 3 கோடி தொழிலாளர்கள் பதிவுசெய்துள்ளனர். ரேஷன் அட்டைகள் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதேபோல இந்த இ-ஷ்ரம் அட்டைகளும் ஒரே நாடு ஒரே அட்டை என்று கொள்கையுடன் வாங்கப்படுவதாக இந்திய அரசின் தலைமை தொழிலாளர் ஆணையரான டிபிஎஸ் நேகி கூறுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்