ஆப்நகரம்

கூலித் தொழிலாளர்கள் வெப்சைட்: 4 கோடிப் பேர் பதிவு!

மத்திய அரசின் இ-ஷ்ரம் போர்ட்டலில் 4 கோடிப் பேருக்கு மேல் பதிவுசெய்துள்ளனர்.

Samayam Tamil 17 Oct 2021, 12:03 pm
நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அரசு தரப்பிலிருந்து இ-ஷ்ரம் என்ற பிரத்தியேக போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா துறையில் உள்ள ஊழியர்களுக்கு சமூக நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்வதையும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டு இரண்டே மாதங்களுக்குள் 4 கோடிப் பேருக்கு மேல் இதில் பதிவுசெய்துள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil e-shram


கட்டுமானம், ஜவுளி உற்பத்தி, மீன் பிடித் தொழில், சாலையோர விற்பனை, வேளாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இதில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இணைபவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. புலம்பெயர் தொழிலாளர் இதில் அதிகமாக இணைந்துவருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும், வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகளையும் பெறலாம்.

நகை வாங்க சூப்பர் சான்ஸ்... ரொம்ப கம்மி விலை!

அரசு தரப்பு விவரங்களின்படி, மொத்தம் 4.09 கோடிப் பேர் இ-ஷ்ரம் போர்ட்டலில் இணைந்துள்ளனர். இதில் சுமார் 50.02 சதவீதத்தினர் பெண்கள். 49.98 சதவீதப் பேர் ஆண்கள். ஆண்களை விடப் பெண்கள் இந்த போர்ட்டலில் அதிகமாக இணைந்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். மாநிலங்களைப் பொறுத்தவரையில், ஒடிசா, மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப் பேர் இந்த போர்ட்டலில் இணைந்து வருகின்றனர். ஆனால் மேகாலயா, மணிப்பூர், கோவா, சண்டிகர் உள்ளிட்ட சிறு மாநிலங்களிலும் யூனியம் பிரதேசங்களிலும் இன்னும் பலர் இதில் இணையாமல் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்