ஆப்நகரம்

தெருவோர வியாபாரிகள் 2 லட்சம் பேருக்குக் கடன்!

பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேருக்குக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 4:20 pm
’பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா’ எனப்படும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டம் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும். இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10,000 வரை கடன் பெற முடியும்.
Samayam Tamil swanidhi


இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுநாள் வரையில் 15 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் விண்ணப்பங்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டுவிட்டன. இந்த ஸ்வநிதித் திட்டத்திற்கு தெருவோர வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. கொரோனா ஊரடங்கு பாதிப்புக்குப் பிறகு தங்களது வியாபாரத்தை மீண்டும் துவங்குவதற்காக மூலதனக் கடன் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்த தெருவோர வியாபாரிகளுக்கு இத்திட்டம் நல்ல பயன் அளித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி சேவை எப்படி இருக்கு?

இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடன் வழங்கும் செயல்முறையை விரிவுபடுத்துவதற்கும், கடன் வழங்குபவர்களின் செயல்பாட்டை எளிமையாக்குவதற்கும் விண்ணப்பங்களை நேரடியாக வங்கிக் கிளைகளுக்கே அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் கடன்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக எடுத்து கொள்ளும் காலம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட செயல்முறையின் வசதிக்காக மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு, அது செப்டம்பர் 11 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்