ஆப்நகரம்

விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு.. இதுக்கு மேல பணம் கிடைக்காது!

அரசிடமிருந்து 2000 ரூபாய் வாங்குவதற்கு விவசாயிகள் இதைச் செய்ய வேண்டும். கால அவகாசம் உள்ளது.

Samayam Tamil 26 Mar 2022, 10:14 am
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக தலா ரூ.2000 என பிரித்து வழங்கப்படுகிறது. இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11ஆவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இதற்காக பதிவுசெய்த விவசாயிகள் அனைவரும் காத்துக்கிடக்கின்றனர்.
Samayam Tamil pm kisan


இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கான கால அவகாசம் முடியும் சூழலில், அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, மே 31ஆம் தேதி வரையில் விவசாயிகள் இந்த வேலையை முடிக்கலாம். இதற்கு முன்னர் மார்ச் 31தான் கடைசி நாளாக இருந்தது.

மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க முடியாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது ஈசியான காரியம்தான். pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்றாலே அதற்கான வசதி இருக்கும்.

1 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்.. அட்டகாசமான வாய்ப்பு!
விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் மோசடி நடைபெறக்கூடாது என்பதற்காகவும், சரியான பயனாளிகளுக்கு நிதியுதவி சென்று சேரவேண்டும் என்பதற்காகவும்தான் இ-கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் திட்டத்தின் நோக்கம் சரியாக நடைபெற இதுபோன்ற விதிமுறைகளைக் கடைபிடிப்பது நல்லதே!

அடுத்த செய்தி

டிரெண்டிங்