ஆப்நகரம்

எல்லாருக்கும் சம்பள உயர்வு.. ஊழியர்களுக்கு குட் நியூஸ்!

2022ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 10 சதவீதம் வரை இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 29 Jan 2022, 5:44 pm
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறையப் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. பலர் தங்களது வேலையையும் சம்பளத்தையும் இழந்தனர். வேலையில் இருந்தவர்களுக்கும் சம்பள உயர்வு போன்ற சலுகைகள் இல்லாமல் போனது. சொல்லப் போனால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் நிறுத்தப்பட்டு, பாக்கித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால், 2021ஆம் ஆண்டில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்தது.
Samayam Tamil salary


இந்நிலையில், 2022ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கணிசமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கான்ஃபெரி நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், இந்த ஆண்டில் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரையில் சம்பள உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலை தற்போது திரும்பியுள்ளதாகவும், நிறுவனங்களும் வருவாய் அதிகரித்துள்ளதால் சம்பள உயர்வு கட்டாயம் இருக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி நிலுவைத் தொகை மொத்தமா வரும்.. அரசு எடுக்கும் முக்கிய முடிவு!
2019ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய சமயத்தில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 9.25 சதவீதமாக இருந்தது. அதேபோல, 2021ஆம் ஆண்டில் 8.4 சதவீத சம்பள உயர்வு காணப்பட்டது. எனினும், இந்த 2022ஆம் ஆண்டில் 9.5 சதவீத உயர்வு மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 46 சதவீத நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் பெரிய தொகையை ஊழியர்களின் சுகாதாரம் உள்ளிட்ட காரணிகளுக்காக செலவிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளன. அதேபோல, வீட்டிலிருந்து வேலைபார்ப்பவர்களுக்கு வீட்டிலேயே அலுவலக செட்டப் ஏற்படுத்தித் தர உதவி வழங்கப்படும் என்று 43 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்