ஆப்நகரம்

பால் விலை உயர்வு.. பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி!

பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

Samayam Tamil 6 Mar 2022, 11:58 am
பால் விநியோக நிறுவனமான மதர் டைரி (Mother Dairy) பால் விலை உயர்த்துவதாக அறித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
Samayam Tamil milk


ஏற்கெனவே அமுல், பராக் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த வரிசையில் மதர் டைரி நிறுவனமும் பால் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 6) முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மதர் டைரி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி - என்சிஆர் பகுதியில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மதர் டைரி தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை 13 ரூபாய் உயர்வு.. வேற வழியே இல்ல!
இதுகுறித்து மதர் டைரி வெளியிட்டுள்ள செய்தியில், “பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாலும், எரிபொருள் செலவுகள் மற்றும் பேக்கேஜிங் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், டெல்லி என்சிஆர் பகுதியில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்த வேண்டிய ஊழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன் அமுல், பராக் ஆகிய நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தின. தற்போது மதர் டைரியும் விலை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்