ஆப்நகரம்

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் இவர்தான்!

சீனாவின் ஜோங் ஷன்ஷனை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி.

Samayam Tamil 27 Feb 2021, 7:45 pm
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கால் வைக்காத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பெரும் வருவாயை ஈட்டி வருகிறது. இந்தியா ஒட்டுமொத்தமாக கொரோனா பிரச்சினையால் தவித்து வந்த சூழலிலும் கூட, அம்பானி மட்டும் ஒருபுறம் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் மும்முரமாகச் செயல்பட்டு வந்தார். இதனால் அவரது சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பங்குச் சந்தையிலும் அவரது ரிலையன்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது.
Samayam Tamil ambani


முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சீனாவின் ஜாங் ஷன்ஷனைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர்களுக்கான பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜாங் ஷன்ஷனின் சொத்து மதிப்பு தற்போது 76.6 பில்லியன் டாலர் மட்டுமே. இவர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தனது சொத்து மதிப்பில் 22 பில்லியன் டாலரை இழந்துள்ளார். இந்த விவரங்களை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பென்சன், சம்பள உயர்வு, பிஎஃப்... முக்கிய அறிவிப்பு!
முன்னதாக தனது இரண்டு நிறுவனங்களைப் பட்டியலிட்ட ஜாங் ஷன்ஷன், முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருந்தார். சர்வதேச அளவில் இவர் ஆறாவது இடத்தில் இருந்தார். இவரது நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் பங்குச் சந்தையில் பெரும் உச்சத்தை அடைந்தன. எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதால் தனது முதலிடத்தை முகேஷ் அம்பானியிடம் இழந்துள்ளார். மறுபுறமோ, முகேஷ் அம்பானி தனது ஜியோ ஃபிளாட்ஃபார்ம் நிறுவனத்தின் பங்குகளை கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து அதிகளவில் நிதி திரட்டி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்