ஆப்நகரம்

அடேங்கப்பா.. நீட்டா அம்பானியின் போன் இத்தனை கோடியா? விலைய கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

உலகின் மிக விலை உயர்ந்த போன் நீட்டா அம்பானியிடம் உள்ளது. இதுல இவ்ளோ அம்சங்கள் இருக்கா?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 6 Mar 2023, 6:51 am
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. முகேஷ் அம்பானியை விட அவரது மனைவி நீட்டா அம்பானி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருவார். மும்பை இந்தியன்ஸ் அணியை உற்சாகப்படுத்துவதிலும் புதிய வணிகத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதிலும் அவர் அடிக்கடி செய்திகளில் வருவார். சிறந்த ஃபேஷன் பெண்மணியும் கூட.
Samayam Tamil nita ambani


நீட்டா அம்பானி தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டவர். அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் இருக்கிறார். முகேஷ் அம்பானி நீட்டாவை 1985ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். நீட்டா அம்பானி 3 குழந்தைகளுக்கு தாய் ஆவார். சமூக சேவை, வணிகம் என எப்போதும் பிசியாக இருப்பவர்.

அம்பானி குடும்பத்தின் வாழ்க்கைச் சூழல் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகின் மிக விலையுயர்ந்த 10 வீடுகளில் இவரது வீடும் ஒன்று. கடந்த சில நாட்களாகவே நீட்டா அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்த செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் வசிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரின் மனைவி நீட்டா அம்பானி எந்த மொபைல் போன் பயன்படுத்துகிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

மொபைல் போன்கள் இன்று நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டன. ஒரு தொழிலதிபருக்கு, அவரது தொலைபேசி மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், அவர் எந்த போனைப் பயன்படுத்துவார் என்பதை நீங்கள் அறிய விரும்பலாம்.

அவர் உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர தொலைபேசியைப் பயன்படுத்துகிறார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவரது கணவர் வெறும் 1500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை வைத்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி வைத்திருக்கும் போனின் விலை ஒரு மொபைல் நிறுவனத்தையே உருவாக்கும் அளவுக்கு மிகவும் அதிகம்.

நீட்டா அம்பானியிடம் Falcon Supernota iPhone-6 பிங்க் டயமண்ட் போன் உள்ளது. இதன் விலை 48.5 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.315 கோடி. இந்த போன் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 24 காரட் தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு தங்கத்தால் ஆனது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்!

இந்த மொபைலில் பிளாட்டினம் இருப்பதால் இந்த போனை உடைக்க முடியாது. இந்த போனை யாராலும் ஹேக் செய்யவும் முடியாது. அப்படி யாராவது முயன்றாலும், இந்த போனின் உரிமையாளருக்கு உடனடியாக மெசேஜ் அனுப்பப்படும்.

நீட்டா அம்பானி தனது ஆடம்பர வாழ்க்கை முறைக்காக எப்போதும் வெளிச்சத்தில் இருக்கிறார். சமீபத்தில் வைத்திருந்த ஹேண்ட் பேக் தலைப்பு செய்திகளில் வந்தது. அவர் அணிந்து வந்த காலணிகளும் செய்திகளாகின. அவர் உலகின் மிக விலையுயர்ந்த ஹேண்ட் பேக்கை பயன்படுத்துகிறார். அதன் விலை சுமார் 30-40 லட்சம் இருக்கும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்