ஆப்நகரம்

பென்சன் வாங்குறவங்களுக்கு உதவும் அரசு!

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 Nov 2020, 7:46 pm
மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு அவர்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இந்த ஆயுள் விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை மத்திய அரசு சமீபத்தில் தளர்த்தியது. 2020 நவம்பர் 1ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ஆயுள் சான்றிதழைத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil samayam-tamil


இதுபோல, மூத்த குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் எளிதாக்கியது. ஜீவன் பிரமான் செயலி வாயிலாக ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாக மிகச் சுலபமாகச் சமர்ப்பிக்கும் வசதியை EPFO அமைப்பு கொண்டு வந்தது. அதேபோல, ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே வந்து ஆயுள் சான்றிதழைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

நெட்வொர்க் கனெக்சன்: இந்தியா சாதனை!

போஸ்ட் ஆபீஸ் சேவை மூலமாக பென்சன் வாங்குவோர் தங்களது ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கலாம். இதில், தபால் காரர்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கிச் செல்வார்கள். வங்கிக் கிளைகளில் முதியவர்கள் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய நிலையை மாற்ற இச்சேவை தொடங்கப்பட்டது. இச்சேவைக்காக 1.36 லட்சம் தபால் காரர்கள் பணியில் இருக்கின்றனர். வீடியோ மூலம் வாடிக்கையாளரை அடையாளம் காணும் V-CIP என்ற முறையை ஓய்வூதியம் தரும் வங்கிகள் பின்பற்றும் நடைமுறை அமலுக்கு வந்தது. வங்கிகளில் கூட்டத்தை தவிர்க்க இதே முறையை ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கும் பயன்படுத்துமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

இதுபோன்ற நடவடிக்கைகளால் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்