ஆப்நகரம்

கேட்காமலேயே ரூ.1.5 லட்சம் கடன்.. இரு மடங்கு கட்ட சொல்லி மாணவிக்கு தொல்லை.. ஆன்லைன் கடன் ஆப்ஸ் அராஜகம்!

மாணவிக்கு கேட்காமலேயே 1.5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்து இம்சை செய்த ஆன்லைன் கடன் ஆப் மீது வழக்கு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 Feb 2023, 1:10 pm
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் ஆப்களின் அராஜகம் ஜாஸ்தியாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் கேட்காமலேயே இஷ்டத்துக்கு கடன் வழங்குவது, அதற்கு விதிமுறைகளை மீறி அதிக வட்டி வசூலிப்பது, கடனை திருப்பி செலுத்தும்படி மிரட்டுவது என ஆன்லைன் கடன் ஆப்கள் பெரும் இம்சையை கொடுத்து வருகின்றன.
Samayam Tamil online loan apps
online loan apps


ஆன்லைன் கடன் ஆப்களின் தொல்லையால் பலர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர். எனவே, ஆன்லைன் கடன் ஆப்களை தடை செய்ய வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் கடன் ஆப் தொல்லையால் ஒரு மாணவி பெரும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார்.

மும்பையை சேர்ந்த 31 வயது மாணவி ஒருவர் கடந்த ஆண்டு தனது மொபைலில் ஆன்லைன் கடன் ஆப் ஒன்றை டவுன்லோடு செய்துள்ளார். ஆப் திறந்தபோது அது கேட்டவற்றுக்கு Permission மட்டும் கொடுத்துள்ளார். மற்றபடி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது.

அவர் ஆப் Permission கொடுத்த உடனே அவர் வங்கிக் கணக்குக்கு 2400 ரூபாய் கடன் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 5 நாட்களுக்கு பின் பணத்தை திருப்பிச் செலுத்தும்படி பல்வேறு நம்பர்களில் இருந்து அவருக்கு போன் செய்து இம்சை கொடுத்துள்ளனர்.

அவர் பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டார். பின்னர், அவர் விருப்பம் இல்லாமலேயே தொடர்ந்து வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருந்துள்ளது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி வரை அவர் வங்கிக் கணக்கில் மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது.

இதையடுத்து, பிப்ரவரி 4ஆம் தேதி முதல் அவரை மிரட்டி லோன் ஏஜெண்டுகள் போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். வங்கிய பணத்தை டபுள் மடங்காக 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியது மட்டுமல்லாமல், பணத்தை தரவில்லை எனில் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து பரப்புவோம் என மிரட்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.

லோன் ஏஜெண்டுகளின் தொல்லை தாங்க முடியாத அந்த மாணவி, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்