ஆப்நகரம்

5,000 பேருக்கு வேலை... கெத்து காட்டும் மிந்த்ரா!

சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ள மிந்த்ரா நிறுவனம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 19 Jun 2020, 5:10 pm
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கடும் வருவாய் இழப்பு காரணமாகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்கள் பலரைப் பணிநீக்கம் செய்துள்ளன. அதேபோல இன்னும் சில காலத்துக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் வழங்கப்படாது எனவும் சம்பள உயர்வு இருக்காது எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளன. இதுபோன்ற சூழலில் மிந்த்ரா நிறுவனம் துணிகர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil myntra


இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்டின் துணை நிறுவனமான மிந்த்ரா, ஆன்லைன் பேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் சார்ந்த பொருட்களை விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனம் ஜூன் 19 முதல் ஜூன் 22 வரையிலான காலத்தில் ’எண்ட் ஆஃப் ரீசன் சேல்’ என்ற விற்பனைச் சலுகையைத் தொடங்கியுள்ளது. இதற்காக 5,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது. இந்த சிறப்பு விற்பனைக் காலத்தின் போது ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி இந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஒரு நாடு ஒரு ரேஷன்... மத்திய அரசு உறுதி!

மிந்த்ராவின் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது இதுவே முதல் முறை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து மிந்த்ரா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான நாகராம் கூறுகையில், “ஒரு வாரத்திற்கு முன்பே நாங்கள் கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கையைத் தொடங்கினோம். இந்த கொரோனா சமயத்தில் அலுவலகத்துக்கு வருபவர்கள் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் போன்ற அனைவருக்கும் இது சவாலான நேரம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து எங்களது பணியாளர்களுக்கு ஆன்லைன் யோகா மற்றும் தியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எங்களது ஊழியர்களின் மனநல ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்