ஆப்நகரம்

பருத்தி விவசாயிகள் மன வேதனை.. காரணம் இதுதான்!

குறைந்த விலைக்கு பருத்தி ஏலம் நடைபெற்றதால் விவசாயிகளும் வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர்.

Samayam Tamil 29 Sep 2022, 2:38 pm
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 42 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. தொடர் மழையால் வரத்து குறைந்து விலையும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Samayam Tamil cotton


நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைக் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், துறையூர், புதுசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள்‌ 1,750 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.‌

இதில், ஆா்.சி.எச். ரகம் ரூ. 4,800 முதல் ரூ.9,333 வரையிலும், மட்ட ரகம் ரூ.1,899 முதல் ரூ.4,999 வரையிலும் ஏலம் போனது. சுரபி ரகம் பருத்தி வரத்து இல்லை. இதில் மொத்தம் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பருத்தி குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.


கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஆர்.சி.எச். ரகம் குவிண்டால் ரூ.5020 முதல் ரூ.10339 வரையிலும், சுரபி ரகம் குவிண்டால் ரூ.9919 முதல் 10209 வரை ஏலம் போனது. அந்த ஏலத்தில் மொத்தம் 1950 மூட்டைகள் 53 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்