ஆப்நகரம்

முட்டை விலை மீண்டும் உயர்வு.. ஆம்லெட் பிரியர்கள் அதிருப்தி!

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மீண்டும் 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 24 Apr 2023, 3:49 pm
நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் 20 காசுகள் உயர்ந்த முட்டை விலை. நான்கு நாட்களில் முட்டை விலை 40 காசுகள் உயர்வு.
Samayam Tamil egg
egg


நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளில் இருந்து 20 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்ட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 20 காசுகளாகவும் கடந்த 22ம் தேதி மீண்டும் 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பண்ணையாளர்கள் வயதான கோழிகளை அதிகளவு விற்பனை செய்து வருவதால் முட்டை உற்பத்தியும் குறைந்து வரும் நிலையில், மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதோடு, ரம்ஜான் நோன்பும் முடிவுக்கு வந்ததால் முட்டை தேவை அதிகரித்த நிலையில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயரவே வாய்ப்புகள் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் சென்னையில் முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 64 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்