ஆப்நகரம்

மோடி அறிவித்த பொருளாதாரச் சலுகை... எல்லாம் சரியாகிவிடுமா?

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வர்த்தகர்களின் நிலையை மேம்படுத்துவதற்கும் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகையைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

Samayam Tamil 13 May 2020, 11:32 am
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும் நாட்டு மக்களுக்கு உதவவும் சிறப்புப் பொருளாதாரச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (மே 12) இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் பேசிய போடி, இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தைத் தமது அரசு வகுத்துள்ளதாகக் கூறினார்.
Samayam Tamil modi


இந்த சிறப்புப் பொருளாதாரச் சலுகைத் திட்டத்தில் சமீப காலத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியத் துறைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும் என்று கூறிய மோடி, இத்திட்டம் Aatmanirbhar Bharat என்ற பெயரில் இயங்க உள்ளதாகக் கூறினார். இதுமட்டுமல்லாமல் பல்வேறு மாற்றங்களுடன் 4வது முறையாக மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் மே 18ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் மோடி அறிவித்தார்.

தங்கம் விலை: நகை வாங்க உடனே புறப்படுங்க!

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் இந்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டம் அடுத்த சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மே 13) விளக்கமாக அறிவிப்பார் என்றும் பிரதமர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கொரோனவால் வர்த்தகத்தையும், வருவாயையும் இழந்து வாடும் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ள சிறப்புச் சலுகையானது இந்திய மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும்.

ஊரடங்கு: கடனை வாரி வழங்கிய வங்கிகள்!

மோடி தற்போது அறிவித்துள்ள இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டமானது முடங்கியிருக்கும் வர்த்தகச் சந்தை மீண்டு எழுவதற்கும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும், மேக் இன் இந்தியா திட்டத்தை வலிமைப்படுத்துவதற்கும் பெரிய அளவில் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, கட்டுமானத் திட்டம், தொழில்நுட்ப அடிப்படையிலான விநியோக முறை, இளம் தலைமுறையினருக்கு முக்கியத்துவம், உள்நாட்டுத் தேவையை வர்த்தகமாக்கும் முயற்சி ஆகிய 5 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டதாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்