ஆப்நகரம்

தமிழகம்: சிறுபான்மையினருக்கு ரூ.47 கோடி கடன்!

தமிழகத்தில் 13,134 பேருக்கு ரூ.47 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி நிறுவனம் வழங்கியுள்ளது.

Samayam Tamil 13 Jul 2020, 8:30 pm
பொருளாதார சாத்தியமுள்ள திட்டங்களுக்காக சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடனுதவிகளை வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில், ஊரகப் பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.98,000 வரை பெறும் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் ரூ.1,20,000 வரை வருமானம் பெறுபவர்களும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனத்தின் (NMDFC) திட்டங்களுக்குத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.
Samayam Tamil loan


சென்ற ஆண்டின் ஏப்ரல் முதல் இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரையில் தமிழகத்தில் மொத்தம் 13,134 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 1,134 பயனாளிகளுக்கு ரூ.17 கோடியும், குறு கடன் திட்டத்தின் கீழ் 12,000 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

கொரோனாவால் 30 லட்சம் பேருக்கு வேலை காலி!

மத்திய அரசின் ஆதரவுடன் ஐந்து திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது. ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான கடன்கள் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தனிநபர் காலக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இக்கடன்களுக்கு 6 முதல் 8 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இக்கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் ஐந்து வருடங்கள் ஆகும். சிறுபான்மை சமுதாய மக்களின் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

என்னது பொருளாதார வளர்ச்சியா... அப்டீன்னா?

சுய உதவிக் குழுவில் உள்ள தனி நபர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தாட்கோ வங்கியின் மூலம் வாகனக் கடனும், சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்விக் கடனும், இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கடனும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தொழில்முறை படிப்புகளுக்கு 3 சதவீத வட்டியுடன் ரூ.15 லட்சம் கல்விக் கடனும், வெளிநாட்டுப் படிப்புகளுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் சிறுபான்மை சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கடனுதவி அவர்களுக்குப் பெரும் உதவியாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்