ஆப்நகரம்

வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்.. நீங்களும் ஈசியா சேரலாம்!

வியாபாரிகளும், சுய வேலை செய்வோரும் பென்சன் திட்டத்தில் சேருவது எப்படி?

Samayam Tamil 16 Feb 2022, 3:21 pm
சிறு வணிகர்கள், சுய வேலை செய்பவர்கள் உள்ளிட்டோரும் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து ஓய்வூதியப் பலன்களை பெறலாம். இதற்காக தேசிய பென்சன் திட்டத்தில் (National Pension Scheme) ஈசியாக முதலீடு செய்து பலன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil national pension scheme offers social security benefits for traders and self employed
வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்.. நீங்களும் ஈசியா சேரலாம்!


​தேசிய பென்சன் திட்டம்

கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பென்சன் திட்டம் வணிகர்கள் மற்றும் சுய வேலை செய்வோருக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. தகுதி பெற்ற வணிகர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

​வணிகர்களுக்கு

சிறு வணிகர்கள், வியாபாரிகள், சுய வேலை செய்வோர், இடைத்தரகர்கள், சிறு தொழில் செய்வோர் உள்ளிட்டவர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு பலன்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தேசிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1.5 கோடி ரூபாய்க்கு மிகாமல் விற்றுமுதல் பெறுவோர் இதில் முதலீடு செய்யலாம்.

​தகுதி

* சில்லறை வணிகர், வியாபாரி அல்லது சுய வேலை செய்வோர்

* 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

* ஆண்டுக்கு விற்றுமுதல் (turnover) 1.5 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

​தேவையான ஆவணங்கள்

ஆதார் கார்டு, சேமிப்புக் கணக்கு/ஜன் தன் கணக்கு ஆகியவை இருந்தால் போதும்.

​திட்டத்தில் சேர

இத்திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்ய அருகில் இருக்கும் பொதுச் சேவை மையத்தை (CSC) அணுகலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்