ஆப்நகரம்

தேசிய ஓய்வூதிய திட்டம்.. செம பென்சன் பிளான்.. முழு வரி விலக்கும் உண்டு!

தேசிய ஓய்வூதியத் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

Samayam Tamil 4 Feb 2022, 4:33 pm
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன் திட்டமாக வளர்ந்துள்ளது. இந்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil pension


அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பின்னாளில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

18 முதல் 65 வயது வரையிலானவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தனியார் துறை ஊழியர்களும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும். பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தால் தேசிய ஓய்வூதிய திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.

சேமிப்புக் கணக்கு வட்டி உயர்வு.. எச்டிஎஃப்சி வங்கியின் அடடே அறிவிப்பு!
இத்திட்டத்தில் பென்சன் பலன்கள் கிடைப்பது ஒருபுறம் இருக்க, வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. இதனால், இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் வட்டித் தொகை, மெச்சூரிட்டி தொகை, மொத்த பென்சன் தொகை ஆகியவற்றுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிடுவோருக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு அட்டகாசமான சாய்ஸ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்