ஆப்நகரம்

ஆட்டையை போடும் மோசடி கும்பல்.. தேசிய பங்குச் சந்தை எச்சரிக்கை!

மோசடி கும்பல் பற்றி முதலீட்டாளர்களுக்கு தேசிய பங்குச் சந்தை எச்சரிக்கை.

Samayam Tamil 22 Feb 2022, 5:29 pm
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு தேசிய பங்குச் சந்தை (NSE) ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது ‘Tradewings Solutions Limited' மற்றும் 'Dayanidhi Pati' ஆகிய பெயர்களில் தனிநபரோ, நிறுவனமோ அணுகினால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி தேசிய பங்குச் சந்தை எச்சரித்துள்ளது.
Samayam Tamil scam


இதுகுறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள செய்தியில், “Tradewing Solutions மற்றும் Dayanidhi Pati ஆகிய பெயர்களில் சிலர் நிதி/டெபாசிட் வசூலித்து அதற்கு லாபம் தருவதாக உத்தரவாதம் அளிப்பதாக எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பெயர்களில் தனிநபரோ, நிறுவனமோ தேசிய பங்குச் சந்தையில் உறுப்பினராகவோ, அங்கீகரிக்கப்பட்ட நபராகவோம் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுய தொழில் தொடங்க கடன்.. இந்த ஈசி திட்டம் பற்றி தெரியுமா?
பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாக கூறும் இதுபோன்ற நபர்கள்/நிறுவனங்களிடம் இணைய வேண்டாம் என முதலீட்டாளர்களுக்கும் எச்சரிக்கையும், அறிவுரையும் வழங்கப்படுகிறது. இதற்கு சட்டரீதியாக தடையும் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இதுபோல பலரும் பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், முதலீட்டாளர்களின் நலன் கருதி பங்குச் சந்தை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்