ஆப்நகரம்

Plastic Ban: இனி இதெல்லாம் பயன்படுத்தக்கூடாது.. இன்று முதல் முழு தடை!

இன்று முதல் நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 1:29 pm
ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸிட்க் பொருட்களுக்கு (Single use plastic) ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி இன்று முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்துள்ளது.
Samayam Tamil plastic ban


இந்தத் தடையின்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, சேகரிக்கவோ, விநியோகிக்கவோ, இற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எந்தெந்த பொருட்களுக்கு தடை?

  • பிளாஸ்டிக் பிளேட், கப், ஸ்பூன், ஃபோர்க், கத்தி, டிரே பொன்ற பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • இதுபோக யெர்பட்ஸ் (Earbuds), பலூன் குச்சிகள், சிகரெட் பாக்கெட்டுகள், ஸ்வீட் பாக்ஸ், மிட்டாய் குச்சிகள், ஐஸ் கிரீம் குச்சிகள், அழைப்பிதழ்கள், அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் பாலிஸ்டிரின் (polystyrene), 100 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிவிசி பேனர்கள்(PVC Banner) ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Gold Import Tax: தங்கம் விலை உயர இதுதான் காரணம்!
பிளாஸ்டிக் துறையின் நிலை என்ன?

இந்தியாவின் பிளாஸ்டிக் தொழில்துறையின் மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய். இத்துறையில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் நேரடியாகவும், 4.5 லட்சம் ஊழியர்கள் மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர். ஏராளமான சிறு, குறு நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டாம் என அரசுக்கு பிளாஸ்டிக் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்