ஆப்நகரம்

Layoffs: 1 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு வேலை காலி.. சைலண்டாக நடக்கும் ஆட்குறைப்பு!

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஐடி ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக தகவல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Feb 2023, 5:58 pm
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இந்தாண்டில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் முதலீடுகளும் குறைந்துள்ளன.
Samayam Tamil it employees
it employees


அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ், ட்விட்டர், ஃபேஸ்புக், ஐபிஎம் என பல்வேறு பெரு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. மிக சமீபத்தில் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டன.

இதுமட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான நடுத்தர மற்றும் சிறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தை தவிர கிட்டத்தட்ட எல்லா தொழில்நுட்ப நிறுவனங்களுமே ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன.

அமேசான் 18000 ஊழியர்களையும், கூகுள் 12000 ஊழியர்களையும், மைக்ரோசாஃப்ட் 10,000 ஊழியர்களையும் ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளன. இதுபோக சேல்ஸ்ஃபோர்ஸ் 7000 ஊழியர்களையும், ஐபிஎம் 3900 ஊழியர்களையும் ஆட்குறைப்பு செய்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் ஐடி ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Layoffs.fyi இணையதளம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.

இந்த இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2023ஆம் ஆண்டில் இதுவரை 288 தொழில்நுட்ப நிறுவனங்கள் 87749 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. கடந்த 2022ஆம் அண்டில் 1042 தொழில்நுட்ப நிறுவனங்கள் மொத்தம் 159766 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக இந்த இணையதளம் கூறுகிறது.

இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிறைய ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. BJYU's, OLX போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே ஊழியர்களை ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன.

வரும் நாட்களில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்