ஆப்நகரம்

ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதிமுறை! ஜூலை 1 முதல் எல்லாம் மாறுது!

ஜூலை 1ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Jun 2021, 2:50 pm
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைக்கிறது. அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்கு (Basic savings book deposit) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். ஏடிஎம், வங்கிப் பரிவர்த்தனை, காசோலை மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
Samayam Tamil sbi


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்கு திறப்பவர்களின் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எதுவும் இருக்கத் தேவையில்லை. அதேபோல, டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. இதன் மூலம் ஏழை எளியவர்கள் கூட மிக எளிதாக வங்கிக் கணக்கு திறக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அது வங்கிக் கணக்கு உள்ள கிளையின்ஏடிஎம் அல்லது இதர வங்கிக் கிளை ஏடிஎம் என எதுவாக இருந்தாலும் பொருந்தும். நான்கு முறைக்கு மேல் எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும்.

பான் - ஆதார் இணைப்பு... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

காசோலைப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரையில், ஒரு நிதியாண்டுக்கு 10 செக் லீஃப்கள் இலவசமாக வழங்கப்படும். அதைத் தாண்டி 10 செக் லீஃப்களுக்கு ரூ.40 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். 25 செக் லீஃப்களுக்கு ரூ.75, எமெர்ஜன்சி செக் புத்தகத்துக்கு ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். வங்கிக் கிளைகளில் பணம் எடுப்பதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

வங்கிக் கிளையில் காசோலை மூலமாகப் பணம் எடுத்தால் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். ஃபார்ம் மூலமாக எடுத்தால் ஒரு நாளில் ரூ.25,000 வரை எடுக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்