ஆப்நகரம்

ரேஷன் கடையில் ஒரு வழியா அது வந்தாச்சு.. சில்லறை பிரச்சினை இனி இருக்காது!

யூபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 May 2023, 4:15 pm
ரேஷன் கடைகளில் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தும் வசதி தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil new facility of paying through upi introduced in tamil nadu ration shops
ரேஷன் கடையில் ஒரு வழியா அது வந்தாச்சு.. சில்லறை பிரச்சினை இனி இருக்காது!


ரேஷன் கார்டு!

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல், பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற உதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.

​சில்லறை பிரச்சினை!

ரேஷன் கடைகளில் இலவச அரிசி - கோதுமை தவிர, நாம் வாங்கும் சர்க்கரை, பருப்பு எண்ணெய் போன்ற பொருட்களுக்கு சிறிதளவு பணம் கொடுக்க வேண்டும். அதன் விலை கடைகளில் விற்கப்படும் விலையை விடக் குறைவாகவே இருக்கும். ரேஷன் கடைக்கு நாம் பொருட்கள் வாங்கச் சென்றால் இவற்றுக்கெல்லாம் சேர்த்து 100 ரூபாய்க்கும் குறைவாகவே பணம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் நிறைய இடங்களில் சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது.

யூபிஐ வசதி!

இந்தியாவில் இப்போது அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. குண்டூசி முதல் தங்கம் வரை எல்லாமே ஆன்லைனில் வந்துவிட்டது. 10 ரூபாய்க்கு டீ குடிக்க கூட கையில் சில்லறை வைத்துக் கொள்ளாமல் ஸ்மார்ட்போன் மூலமாக யூபிஐ வசதியில் பணம் செலுத்தி விடுகின்றனர். இப்போது எல்லா இடத்திலும் யூபிஐ வந்துவிட்டது. சொல்லப்போனால் செருப்பு தைப்பவர் கூட யூபிஐ முறையில் பணம் பெறுகிறார்.

ரேஷன் கடையில் ஏன் இல்லை?

டீ கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை பொதுமக்கள் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் யூபிஐ வசதி வந்துவிட்டது. கோவில்களில் உண்டியல் காணிக்கை செலுத்துவதற்குக் கூட யூபிஐ வசதி உள்ளது. இதுபோன்ற சூழலில், பொதுமக்கள் அடிக்கடி வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் ரேஷன் கடையில் யூபிஐ வசதி ஏன் இருக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

​தமிழ்நாட்டில் அறிமுகம்!

இந்நிலையில், தற்போது ரேஷன் கடைகளில் யூபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யூபிஐ வசதி முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மே மாத முடிவுக்குள் தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் யூபிஐ வசதியைக் கொண்டுவரும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி!

ரேஷன் கடைகளில் யூபிஐ வசதி அமலுக்கு வருவதால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கச் செல்லும் போது இனி வீட்டிலுள்ள சேமிப்பு உண்டியலை உடைக்கத் தேவை இருக்காது. சில்லறை பிரச்சினைக்காக வெகு நேரம் ரேஷன் கடையில் காத்திருப்பதும் சில்லறைக்காக அங்கும் இங்கும் அலைய வேண்டியதும் இனி இருக்காது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்