ஆப்நகரம்

Gpay பயன்படுத்துவோருக்கு புதிய வசதி.. இனி ஆதார் மட்டும் போதும்!

ஆதார் கார்டு மூலமாக யூபிஐ ஐடி ஆக்டிவேட் செய்யும் வசதி கூகுள் பே செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 8 Jun 2023, 12:35 pm
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வழியாக ஆதாரைப் பயன்படுத்தி பதிவு செய்வதற்கான வசதியை கூகுள் பே (Google Pay) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக, ஆதார் அடிப்படையிலான UPI மூலம் Google Pay பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல் UPI பின் நம்பரை உருவாக்க முடியும். இந்த வசதியின் மூலம் இன்னும் பல மக்களுக்கு UPI ஐடிகளை உருவாக்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil gpay


இந்த வசதி கூகுள் பே செயலியில் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும். விரைவில் மற்ற வங்கிகளும் இச்சேவையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் வழியாக UPI வசதியை இணைக்க விரும்பும் பயனர்கள் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பர் ஒன்றாக இருப்பதையும், அவர்களின் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் இதைச் செய்தவுடன் கீழே உள்ள படிகளைப் பயன்படுத்தி ஆன்போர்டிங் செய்யலாம்.

>> Google Pay செயலியில் பயனர்கள் டெபிட் கார்டு அல்லது ஆதார் அடிப்படையிலான UPI ஆன்போர்டிங்கில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளது.

>> அவர்கள் ஆதாரைத் தேர்ந்தெடுத்தால் தங்கள் ஆதார் எண்ணின் முதல் ஆறு இலக்கங்களை உள்ளிட வேண்டும்.

>> அடுத்து ஆதார் மற்றும் மற்றும் வங்கியிலிருந்து பெறப்பட்ட OTP நம்பர்களை உள்ளிட வேண்டும்.

>> அதன்பிறகு, அந்தந்த வங்கி செயல்முறையை முடித்து அவர்கள் UPI பின் நம்பரை உருவாக்கலாம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தரவுகளின்படி, இந்தியாவில் வயது வந்தோரில் 99.9 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆதார் எண்ணைக் கொண்டுள்ளனர். மேலும் மாதத்திற்கு ஒரு முறையாவது அதைப் பயன்படுத்துகின்றனர். UPI முறையில் ஆதார் அடிப்படையிலான ஆன்போர்டிங் வசதி, அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்குக் கிடைக்கச் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Google Pay ஆப்பை பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யலாம். பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்பதையும் சரிபார்க்கலாம். ஒரு பயனர் ஆதார் எண்ணின் முதல் ஆறு இலக்கங்களை உள்ளிட்டதும், அது சரிபார்ப்பிற்காக NPCI வழியாக UIDAIக்கு அனுப்பப்படும். இந்த செயல்முறை பயனர்களின் ஆதார் எண்ணின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்