ஆப்நகரம்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய்... புதிதாக பதிவு செய்வது எப்படி?

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு புதிய வசதி உள்ளது.

Samayam Tamil 11 Oct 2021, 5:37 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது இந்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டமாகும். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாய குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் கிடைக்கும்.
Samayam Tamil pm kisan


இதுவரையில் மொத்தம் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 10ஆவது தவணை விரைவில் வரவிருக்கிறது. ஒவ்வொரு 4-மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் மாதங்களில் தலா ரூ.2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகும். வங்கிக் கணக்கு எண், மொபைல் நம்பர், நில ஆவணங்கள் போன்றவையும் அவசியும். பயனாளியின் விவரங்கள் அரசு தரப்பில் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படுகிறது. அனைவருக்குமே நிதியுதவி கிடைத்துவிடாது. தகுதியுடைய விவசாயிகளுக்கு மட்டுமே நிதியுதவி கிடைக்கும். பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 9 தவணைகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் பலர் இதில் இணையாமல் உள்ளனர். அதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Gold rate: அடடே... தங்கம் விலை இவ்ளோ குறைஞ்சிருக்கே!

www.pmkisan.gov.in.என்ற பிஎம் கிசான் வெப்சைட்டில் ’Farmers Corner’ என்ற பிரிவின் கீழ் 'New farmer Registration' என்ற வசதி இருக்கும். அதில் சென்று பயனாளியின் விவரங்களைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இது மாநில நோடல் அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்படும். அதன் பின்னரே நிதியுதவி கிடைக்கும். ஒருவேளை தகுதியுடைய விவசாயிகளின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் மாவட்ட வாரியான குறைதீர்ப்பு கண்காணிப்புக் குழு அதிகாரியை அணுகி தீர்வு காணலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்