ஆப்நகரம்

செக் பரிவர்த்தனைகளுக்கு இதெல்லாம் மாறப்போகுது!

செக் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கின்றன.

Samayam Tamil 13 Dec 2020, 12:53 pm

செக் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. positive pay system என அழைக்கப்படும் இத்திட்டத்தின்படி, 50,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு சில முக்கிய விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
Samayam Tamil Cheque


பாதுகாப்பை உறுதி செய்யவும், மோசடிகளை தவிர்க்கவும், செக் பரிவர்த்தனைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்திற்கு பின் வெளியானது.

நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்... அதற்கான வழிகள் இதோ...

ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. செக் எண், செக் தேதி, பணம் பெறுபவரின் பெயர், அக்கவுண்ட் எண், தொகை உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் மோசடிகள் கண்டறிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி, செக் வழங்குபவர் தனது விவரங்களை எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை சரிபார்க்கப்படும். வெரிபிகேஷனின்போது தகவல்கள் ஒத்துப்போகாவிட்டால் வங்கிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய பரிவர்த்தனை கழகம் சார்பில் positive pay system வசதி உருவாக்கப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்படும். 50000 ரூபாய்க்கு மேலான செக் பரிவர்த்தனைகளுக்கு இந்த வெரிபிகேஷன் முறையை வங்கிகள் அமல்படுத்தும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்