ஆப்நகரம்

சிலிண்டர் மானியம்.. இலவச சிலிண்டருக்கு புது ரூல்ஸ்!

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் மானியத்தில் புதிய மாற்றம் வரவிருக்கிறது.

Samayam Tamil 13 Feb 2022, 5:48 pm
சிலிண்டருக்கு மானிய உதவி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி காத்திருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இலவச சிலிண்டர் இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தில் பெரிய மாற்றம் வரவிருக்கிறது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிய இணைப்புகளுக்கான மானியச் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil lpg


பெட்ரோலிய அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய சிலிண்டர் இணைப்புகளை வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சிலிண்டருக்கான முன்பணம் செலுத்தும் முறையை மத்திய அரசு மாற்றவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய விதிமுறையின்படி, முன்பணம் செலுத்தும் நிறுவனம் மொத்தமாக ரூ.1600 வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், எண்ணெய் விநியோக நிறுவனங்கள் சிலிண்டர் இணைப்புக்கான முன்பணத்தை ஈஎம்ஐ மூலமாக வசூலிக்கின்றன. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.3,200. இந்தத் தொகையில் அரசிடமிருந்து 1600 ரூபாய் மானியம் கிடைக்கிறது. சிலிண்டருக்கு மானிய பணம் வரலயா? உடனே இதைப் பண்ணுங்க.. பணம் வரும்!
மீதமுள்ள 1600 ரூபாயை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் முன்பணமாகக் கொடுக்கின்றன. இந்தத் தொகையை ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் மானியத்திலிருந்து எண்ணெய் விநியோக நிறுவனங்கள் வசூலித்துக்கொள்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்