ஆப்நகரம்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!

தபால் நிலையங்களில் இணைப்பு கணக்கு வைத்திருப்பதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன...

Samayam Tamil 20 Sep 2021, 7:21 pm
தபால் நிலையங்களில் கணக்கு தொடங்குபவர்கள் தனிக் கணக்காகவோ அல்லது இணைப்புக் கணக்காகவோ திறக்கும் வசதி உள்ளன. இதில் வாடிக்கையாளர்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை எவ்வாறு பிரித்து வழங்கப்படும் என்ற விஷயத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இணைப்பு கணக்கு தொடங்கும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்தக் கணக்கை மூடும்போதும், டூப்ளிகேட் பாஸ்புக்குக்கு விண்ணப்பிக்கும்போதும்தான் சிக்கல் ஏற்படுகிறது.
Samayam Tamil post office


இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களில் இரு வகைகளுக்கு ஏற்ப செட்டில்மெண்ட் தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இணைப்புக் கணக்கில் ஏ மற்றும் பி ஆகிய இரு வகைகள் உள்ளன. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (SCSS)போன்ற திட்டங்களில் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே இணைப்புக் கணக்கு திறக்க முடியும். இதில் ஏ வகையில் மூன்று பேருக்குமே செட்டில்மெண்ட் தொகை வழங்கப்பட வேண்டும்.

ஒரே முதலீடு.. மாதம் தோறும் வருமானம்.. போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
மூன்று பேருக்கோ அல்லது உயிரோடு இருக்கும் கணக்காளருக்கோ வழங்கப்படும். ஆனால், பி வகையில் மூன்று பேரில் ஏதேனும் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். செட்டில்மெண்ட் தொகை மட்டுமல்ல, கணக்கு தொடர்பான எந்தவொரு சேவைக்கும் ஏதேனும் ஒரு நபர் மட்டுமே கணக்கைக் கையாள முடியும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் கணவன் பெயரில் தனியாகவோ அல்லது மனைவியுடன் சேர்த்து கூட்டாக இணைப்புக் கணக்கு திறந்திருந்தால் முதல் பயனாளிக்கு மட்டுமே பணம் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்