ஆப்நகரம்

20 ரூபாய் உட்பட பல்வேறு புதிய நாணயங்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும் - பட்ஜெட் சிறப்பு அறிவிப்பு!

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிதாக பல்வேறு வகையான நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jul 2019, 4:04 pm
நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்முறையாக நிதியமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
Samayam Tamil New Rupee Coins


இதில், புதிய ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்படுகிறது. இவற்றில் ரூ.20 நாணயம் முதல்முறையாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்த நாணயங்களை கடந்த மார்ச் 7ஆம் தேதியே பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய நாணயங்கள் அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ரூ.20 நாணயம் 12 பக்கங்களுடன், காப்பர் - ஜிங்க்- நிக்கல் உலோகக் கலவையால் செய்யப்பட்டிருக்கும்.

புதிய நாணயங்களில் அசோகத் தூண், ”சத்யமேவ ஜெயதே” என்ற வரிகள், “பாரத்”, இந்தியா” ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது 13 வகையான ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.

இதனால் வர்த்தகர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி, அவற்றை வாங்க மறுக்கும் சூழல் ஏற்பட்டது. இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் புதிய நாணயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்