ஆப்நகரம்

பென்சன் பயனாளிகளுக்கு புதிய வசதி.. இனி ரொம்ப ஈசி!

தேசிய பென்சன் திட்டத்தின் பயனாளிகளுக்கு புதிய வாட்சப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jun 2022, 5:09 pm
தேசிய பென்சன் திட்டத்தை (National Pension System) பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தில் ஏராளமான தனியார் துறை ஊழியர்களும் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர்.
Samayam Tamil NPS


இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் பயனாளிகளுக்காக புதிதாக வாட்சப் (WhatsApp) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் கீழ் பயனாளிகள் தங்களது எல்லா கேள்விகளுக்கும் வாட்சப் வாயிலாக ஈசியாக பதில் தெரிந்துகொள்ளலாம்.

இவர்களுக்கு பென்சன் கிடையாது.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
இந்த வசதியை பயன்படுத்தி தகவல்களை தெரிந்துகொள்வது எப்படி?

  • உங்கள் மொபைலில் 8588852130 என்ற எண்ணை பதிவு செய்துகொள்ளவும்.

  • வாட்சப்பில் (WhatsApp) இந்த எண்ணுக்கு 'Hi' என மெசேஜ் அனுப்பவும்.

  • உங்களுக்கு இப்போது வரும் மெசேஜில் தேசிய பென்சன் திட்டம் சார்ந்த பல ஆப்ஷன்கள் வரும்.

  • அதில் உள்ள கேள்விகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

  • பட்டியலில் உங்களுக்கான கேள்வி இல்லை எனில் 'Need more help' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  • அதன்பின் உங்கள் பிரச்சினை குறித்து தேசிய பென்சன் திட்ட அறக்கட்டளைக்கு grievances @npstrust.org.in இமெயில் வாயிலாக குறைகளை தெரிவிக்கலாம்.

  • இதுபோக, 1800 222 080 இலவச எண்ணை அழைத்தும் தகவல்களை பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்