ஆப்நகரம்

இப்போ சாப்பிடு.. இறந்தபின் பணம் கொடு.. உணவகத்தின் நூதன திட்டம்!

இப்போது பீட்சா சாப்பிட்டுவிட்டு இறந்தபின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஒரு பீட்சா உணவகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 May 2023, 4:16 pm
உணவை இப்போது சாப்பிட்டுவிட்டு இறந்தபிறகு பணம் செலுத்தினால் போதும் என்ற நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு பீட்சா உணவகம்.
Samayam Tamil hell pizza afterlife pay
hell pizza afterlife pay


அண்மைக்காலமாக BNPL எனப்படும் Buy Now Pay Later பரிவர்த்தனை முறை பிரபலமாகியுள்ளது. BNPL என்றால் பொருளை வாங்கிவிட்டு பின்னர் தாமதமாக பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வசதி. உடனடியாக கையில் பணம் இல்லாதவர்களுக்கு இந்த வசதி உதவுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, உணவை இப்போது சாப்பிடு, பணத்தை இறந்த பிறகு கொடு என்ற ‘Pay After Death' பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியுள்ளது நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஹெல் பீட்சா (Hell Pizza) நிறுவனம். இது சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடிய பரிவர்த்தனை முறையாக இருந்தாலும் மக்களின் கவனத்தை நிச்சயமாக ஈர்த்துள்ளது.

இந்த திட்டத்துக்கு ‘AfterLife Pay' என பெயர் வைத்துள்ள ஹெல் பீட்சா நிறுவனம். இதில் அனைவருமே சேர்ந்துவிட முடியாது. முதலில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 666 பேரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 666 பேரும் மட்டுமே இத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஹெல் பீட்சா உணவகத்தில் இஷ்டம்போல பீட்சா மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டுக்கொள்ளலாம். அதற்கான பணத்தை இறந்தபிறகு செலுத்தினால் போதும். அது எப்படி இறந்த பிறகு பணம் செலுத்த முடியும்? அதற்காகவே ஒரு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.

அதன்படி, அவர்கள் உயிலில் திருத்தம் செய்வதற்கு ஒரு ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திட்டால் போதுமானது. இறந்தபிறகு மொத்த கட்டணமும் வசூலிக்கப்பட்டுவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உணவுக்கான பில் கட்டணம் தவிர கூடுதலாக வட்டி அல்லது வேறு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் ஹெல் பீட்சா தெரிவித்துள்ளது.

இந்த இறந்தபின் பணம் செலுத்தும் முறையை மார்க்கெட்டிங் யுக்தியாகவே ஹெல் பீட்சா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு எழுந்துள்ளதாக ஹெல் பீட்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்