ஆப்நகரம்

பழைய பென்சன் திட்டம்.. இந்த நம்பருக்கு டீட்டைல் அனுப்புங்க.. CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான போராட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் அடுத்த நடவடிக்கை இதுதான்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 28 Apr 2023, 6:48 pm
மே மாதம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸ் ஆப் எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil cps protest


CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மே 1ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

பிப்ரவரி 1ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி CPS திட்டத்தில் இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பத்தினர் பங்குபெறும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விவாதித்து திட்டமிட உள்ளனர்.

எனவே, மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை CPS ஒழிப்பு இயக்க மாநில மையம் வெளியிட்டுள்ள நிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த குடும்ப உறுப்பினர் பங்கேற்கும் உண்ணாவிரதம் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தங்கள் துறையில் CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கீழ்கண்ட விவரங்களை வாட்ஸ் ஆப் எண்களுக்கு மே 1ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1) இறந்த ஊழியர் / ஆசிரியரின் பெயர்:

2. பணிபுரிந்த துறை மற்றும் பதவி:

3. குடும்பத்தினர்பெயர் மற்றும் வீட்டு முகவரி கைபேசி எண்:

4. தொடர்புள்ள நிர்வாகி பெயர் கைபேசி எண்:

தகவல்கள் அனுப்ப வேண்டிய கைபேசி எண்கள்:

9698687883

9629927400

8012383227

8778726213

பழைய பென்சன் திட்டத்துக்காக இதைச் செய்யணும்.. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் கீழ் ஒன்றாக இணைந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் மௌனம் காப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது போன்ற வாக்குறுதிகள் கிடப்பில் கிடப்பதால் அரசு ஊழியர்களும் பகுதி நேர ஆசிரியர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்