ஆப்நகரம்

பட்ஜெட் எதிரொலியால் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை; 10,900 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

Samayam Tamil 1 Feb 2019, 1:54 pm
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இது பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் காணப்பட்டது. நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ் 3% அளவிற்கு குறைந்தது.
Samayam Tamil sensex-reuters-1


இதனால் மெட்டல் பங்குகள் சரிவுடன் இருந்தன. பாதுகாப்புத் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால், பாதுகாப்புத் துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டன. விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட உடன், விவசாய உபகரணங்கள் தயாரிப்பாளர்களின் பங்குகள் உயர்ந்தன.

வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நண்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 415.32 புள்ளிகள் அதிகரித்து 36,672.01 புள்ளிகளில் வர்த்தகமானது.

இதேபோல் நிஃப்டி 116.60 புள்ளிகள் உயர்ந்து, 10,947.60 புள்ளிகளில் வர்த்தகமானது. ஆட்டோமொபைல் பங்குகள் ஹீரோ மோட்டோகார்ப், எய்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி பங்குகள் முறையே 6.9%, 4.8%, 5.3% அளவிற்கு உயர்ந்தன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்