ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் 1% உயர்வுடன் முடிவு

இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை, 1% உயர்வுடன் முடித்துள்ளன.

TNN 30 Jun 2016, 6:28 pm
இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை, 1% உயர்வுடன் முடித்துள்ளன.
Samayam Tamil nifty ends at 8 month closing high on fo expiry
பங்குச்சந்தைகள் 1% உயர்வுடன் முடிவு


சர்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்தன. உள்நாட்டிலும் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி உயர்வுடன் காணப்படுவதாக, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டது. மேலும், அனைத்து முக்கிய துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தாராள அனுமதி அளிக்கப்பட்டது, 7வது ஊதியக்குழு பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது போன்ற காரணங்களால், அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்துவருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை தொடங்கி, பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட இவை முக்கிய காரணமாகும். குறிப்பாக, இன்றைய பங்கு வர்த்தகத்தில் முன்பேர வர்த்தகக் கணக்கை நேர் செய்யும் நாளாக இருந்தபோதிலும், மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்பட அனைத்துத் துறை பங்குகளும் விலை அதிகரித்து காணப்பட்டன.

வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 259 புள்ளிகள் உயர்வுடன் 26,700 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 84 புள்ளிகள் அதிகரித்து 8,288 புள்ளிகளாகவும் முடிந்தது. இது ஒரு சதவீத உயர்வாகும். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதிக்குப் பின் நிஃப்டி புள்ளிகள் அதன் அதிகபட்சத்தை தொட்டு முடிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்