ஆப்நகரம்

கடந்த 8 மாதத்தின் அதிகபட்ச புள்ளிகளில் நிஃப்டி முடிவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. குறிப்பாக, நிஃப்டி புள்ளிகள் கடந்த 8 மாதத்தின் அதிகபட்ச புள்ளிகளில் முடிந்துள்ளது.

TNN 30 May 2016, 5:57 pm
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. குறிப்பாக, நிஃப்டி புள்ளிகள் கடந்த 8 மாதத்தின் அதிகபட்ச புள்ளிகளில் முடிந்துள்ளது.
Samayam Tamil nifty ends at 8 month high coal india up 4 bhel falls 6
கடந்த 8 மாதத்தின் அதிகபட்ச புள்ளிகளில் நிஃப்டி முடிவு


சர்வதேச பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. உள்நாட்டிலும், தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்தபடி இருக்கும் எனக் கூறப்பட்டது. அத்துடன், முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளதால், சந்தைகளில் முதலீடு அதிகரித்திருந்தது.

வரும் ஜூன் 7ம் தேதி, ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை வெளியாக உள்ளது. அதில், வட்டிவிகிதங்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்கவே, பங்குச்சந்தைகளும் அதிகரித்தன.

உலோகம், ஐடி, தொழில்நுட்பம் ஆகிய துறை பங்குகள் விலை உயர்ந்தும், மருந்து மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் விலை குறைந்தும் இருந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்ந்து, 26,726 புள்ளிகளாகக் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 22 புள்ளிகள் அதிகரித்து, 8,178 என்ற கடந்த 8 மாதத்தின் அதிகபட்ச புள்ளிகளில் முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்