ஆப்நகரம்

உயர்வுடன் நிறைவடைந்தன இந்தியப் பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.

TNN 5 Aug 2016, 4:56 pm
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.
Samayam Tamil nifty ends at 8683 sensex gains 364 pts
உயர்வுடன் நிறைவடைந்தன இந்தியப் பங்குச்சந்தைகள்


இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்ந்து, 27,945.40 புள்ளிகளாக இருந்தது. உலோகம், வங்கி, ஆட்டோ, பொதுத்துறை மற்றும் மின்சாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.25% வரை அதிகரித்து காணப்பட்டன.

தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78 புள்ளிகள் அதிகரித்து 8,629.25 புள்ளிகளாக இருந்தது. ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு சரிந்தும், ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் ஆகியவை உயர்ந்தும் காணப்பட்டன.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்ந்து, 28,078 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் நிப்ஃடி 132 புள்ளிகள் அதிகரித்து, 8,683 புள்ளிகளில் வர்த்தகமானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்