ஆப்நகரம்

தொடர் வீழ்ச்சிக்கு பின் எழுச்சி; சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்வு - நிஃப்டி 10,750ல் நிறைவு!

இன்றைய பங்கு வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் உயர்வில் முடிவு பெற்றுள்ளது.

Samayam Tamil 21 Feb 2019, 5:09 pm
வாரத்தின் மூன்றாம் நாளான இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய போது, சென்செக்ஸ் 119.25 புள்ளிகள் உயர்ந்து, 35,471.86 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் நிஃப்டி 71.30 புள்ளிகள் அதிகரித்து, 10,675.70 புள்ளிகளில் வர்த்தகமானது.
Samayam Tamil Sensex


இதையடுத்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி படிப்படியாக உயரத் தொடங்கியது. இறுதியாக 403.65 புள்ளிகள் அதிகரித்து, சென்செக்ஸ் 35,756.26 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இதேபோல் நிஃப்டி 131.10 புள்ளிகள் உயர்ந்து, 10,735.50 புள்ளிகளில் முடிவுற்றது.

மொத்தம் 1,468 பங்குகள் லாபமும், 1,107 பங்குகள் நஷ்டத்தையும், 161 பங்குகள் எந்தவித மாற்றமும் இன்றியும் காணப்பட்டன, இண்டியாபுல்ஸ் ஹவுசிங், வேதாந்தா, டாடா ஸ்டீல், அடானி போர்ட், ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

மேலும் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட், ஹீரோ மோட்டோகார்ப், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஹெச்.யு.எல், பஜாஜ் ஆட்டோ ஆகியவை நஷ்டத்தைச் சந்தித்தன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்