ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வு

புதன்கிழமை வர்த்தகத்தை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.

TNN 29 Jun 2016, 5:05 pm
புதன்கிழமை வர்த்தகத்தை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.
Samayam Tamil nifty reclaims 8200 on 7th pay commission approval brexit woes ease
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வு


7வது ஊதிய பரிந்துரைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஜூலை 18ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில், சரக்கு சேவை வரி மசோதா நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே காணப்படுகிறது. பிரெக்ஸிட் பாதிப்பு சற்று குறைந்து, சர்வதேச சந்தைகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இதையடுத்து, இந்திய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின. முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்தன. வர்த்தகத்தின் இடையே நிஃப்டியின் புள்ளிகள் 8,200க்கு மேலே சென்றன.

அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் துறை பங்குகள் தவிர்த்து, எஞ்சிய அனைத்துத் துறை பங்குகளும் விலை உயர்ந்து முடிந்தன. தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில், ஹீரோமோட்டோகார்ப், பவர் க்ரீட் கார்ப்பரேஷன், என்டிபிசி, விப்ரோ, கெயில் ஆகியவை அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தன.

வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 216 புள்ளிகள் அதிகரித்து, 26,740 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 76 புள்ளிகள் உயர்வுடன் 8,204 புள்ளிகளாக முடிந்தது. இது ஒரு சதவீத உயர்வாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்