ஆப்நகரம்

Share Market: அதிரடி உயர்வில் சென்செக்ஸ்... ரூபாய் மதிப்பும் உயர்வு

இந்திய பங்குசந்தை இன்று உயர்வுடன் முடிவடைந்துள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 4:31 pm
இந்திய பங்குசந்தை இன்று உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
Samayam Tamil bsc


இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 412 புள்ளிகள் உயர்ந்து 38,545.72 புள்ளிகளில் முடிந்துள்ளது.

இன்று உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தையில் மதியம் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கங்கள் கண்டு சந்தை முடிவில் 412 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. இதனால் சென்சென்ஸ் 38,545.72 என்ற உச்சத்தை எட்டியது.

இதேபோல நிப்டி 124.95 புள்ளிகள் உயர்ந்து 11570.00 புள்ளிகளில் முடிவுற்றது. அந்நிய முதலீடுகளின் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வலுவடைந்தது போன்றவை இந்த உயர்வுக்குக் காரணங்கள் எனக் கருதப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு இன்று 0.12 காசுகள் உயர்ந்து ஒரு டாலருக்கு ரூ. 68.99 என உயர்வுகளுடன் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்